Thursday, July 03, 2008

இராணுவத்தில் ஆள் சேர்க்கும் நிகழ்ச்சி

அது ஒரு இராணுவத்தில் ஆள் சேர்க்கும் நிகழ்ச்சி.

இறுதிச் சுற்றில் இரண்டு ஆண்கள், மற்றும் ஒரு பெண் தேர்வாயினர்.
அடுத்து அம்மூவரின் கீழ்படியும் குணத்தை அறிய ஒரு சோதனை.

தேர்வாளர்: நீங்கள் ஒவ்வொருவராக இந்த அறைக்குள் சென்று உள்ளே இருக்கும் நபரை இந்த துப்பாக்கியால் சுட்டு சாகடிக்க வேண்டும்.

மூவரும்:சரி.

தேர்வாளர்: ஆனால், உள்ளேன் இருப்பது உங்கள் வாழ்க்கைத்துணை(கணவன்/மனைவி)

ஆண்1: உங்களுக்கு என்ன பைத்தியமா ?. எனக்கு வேலையே தேவை இல்ல.

ஆண்2: நான் முயற்ச்சி செய்து பார்கிறேன்.
(துப்பாக்கியை வாங்கிக்கொண்டு உள்ளே போகிறார்.
ஒரு நிமிடம் அமைதி. மறு நிம்டம் அழுதுகொண்டே வெளியே வருகிறார்)

ஆண்2: என்னால் முடியவில்லை. தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.

(கடைசியாக பெண். துப்பாக்கியை வாங்கிக்கொண்டு உள்ளே போகிறார்.
க்ளிக்...க்ளிக்..என இரண்டு முறை சத்தம்.
அடுத்து எதோ உடை படும் சத்தம். "ஐயோ அம்மா.." என அலறல்.
5 நிமிடங்கள் கழித்து கையில் இரத்தத்துடன் பெண் வருகிறாள்)

தேர்வாளர்: என்ன ஆச்சி?

பெண்: என்ன சார், துப்பாக்கியில குண்டே இல்ல.
வேற வழி இல்லாம நாற்காலியால் அடித்து சாகடிக்க வேண்டியதா போச்சி!!

நீதி: மனைவியை பகைக்காதே.

Labels: