Sunday, September 06, 2009

காரில் குரங்குகள்

பெட்ரோல் பங்கில்...
பெட்ரோல் போட கார் வந்து நிற்கிறது..
பெட்ரோல் போடுபவர் வந்த காரின் பின் சீட்டில் இரண்டு குரங்குகள் இருப்பதைப் பார்த்தார்.
"சார், உங்க காரில் இரண்டு குரங்குகள் உள்ளதே?"
"ஆமாம், எப்படி வந்ததுன்னு தெரியல..கீழே இறங்கவும் மறுக்கின்றன" என்றார்.
"பேசாம விலங்கியல் பூங்காவுக்கு கொட்டிட்டு போங்க" என பதிலுரைத்தார்.

மறுநாள்...

மீண்டும் அதே கார், அதே டிரைவர்..அதே குரங்குகள்.

"சார், உங்க காரில் இரண்டு குரங்குகள் இன்னும் உள்ளதே?"

" நீங்க சொன்ன மாதிரி நேற்று விலங்கியல் பூங்கா சென்றோம்....ஜாலியா இருந்து..இன்னிக்கு கடற்கரைக்கு போய்க்கொண்டிருக்கின்றோம்..சீக்கிரம் பெட்ரோல் போடு" என்றார் டிரைவர்.

Labels:

Friday, July 11, 2008

பக்கத்து சீட் காலிதான?

(திரை அரங்கில்)

குப்பன்: ஏங்க உங்க பக்கத்து சீட் காலிதான?

சுப்பன்: ஆமாம், என் மனைவிக்கு டிக்கெட் வாங்கினேன் அவளால வரமுடியல.

குப்பன்: சரி, அதனால் என்ன, உங்க நண்பர் யாரையாவது அழைத்து வந்திருக்கலாமே?

சுப்பன்: அவங்க யாரும் வரமுடியாது, எல்லோரும் என் மனைவியோட இறுதி ஊர்வலத்துல இருக்காங்க.

Labels: ,

Thursday, July 10, 2008

டாக்டரே கண்கண்ட துணை

ஒரு ஆணும் பெண்ணும் டாக்டரிடம் சென்றனர்.
ஆண்: டாக்டர், எங்க செக்ஸ் வாழ்கையில பிரச்சனை இருக்கு.

டாக்டர்: என்ன பிரச்சனை

ஆண்: சொல்ல தெரியல

டாக்டர்: சரி, எனக்கு முன்னால 'தப்பு' பண்ணுங்க

('தப்பு' செய்தனர், அது முடிந்த பின்...)

டாக்டர்: ஒரு பிரச்சனையும் இல்லியே, எல்லாம் நார்மலாதான இருக்கு.

ஆண்: ரொம்ப நன்றி டாக்டர், பீஸ் எவ்வளவு?

டாக்டர்: 150 ரூ.

ஆண்: இந்தாங்க, நாங்க வர்றோம்.


அடுத்த வாரம், அதே டாக்டர், அதே ஜோடி, அதே பிரச்சனை, அதே 'தப்பு', அதே 150 ரூ பீஸ்.

மூன்றாவது வாரமும் அதே டாக்டர், அதே ஜோடி, அதே பிரச்சனை, ஆனால்...

டாக்டர் கடுப்பாகி கேட்டார், "யோவ், என்ன விளையாடுறியா?"

பதிலுக்கு ஆண், "இல்ல டாக்டர், அவங்க இடத்துக்கும் போகமுடியாது, என் இடத்துக்கும் போக முடியாது. லாட்ஜுக்குப் போன வாடகை 500 ரூ ஆகுது, அதில்லாம போலிஸ் தொல்லை வேற. இங்க வந்தா வெறும் 150 ரூபாதான், காவலுக்கு நீங்க வேற இருக்கீங்க அதான் வார வாரம் வர்றோம்" என்றானாம்.

Labels: , ,

பயமா இருந்தா கண்ணை மூடிக்கோ


பயணி: யோவ்...டிரைவர் வண்டிய மெதுவா ஒட்டுயா, பயமா இருக்கு.

டிரைவர்: உனக்காக மெதுவா போக முடியாது, பயமா இருந்தா என்னை மாதிரி கண்ணை மூடிக்கோ.

Labels:

சந்தோசமான குடும்பம்

குப்பன்: உங்க வீட்ல எப்பவும் சிரிப்பு சத்தம் கேக்குதே எப்படி?
சுப்பன்: என் மனைவி என் மேல பாத்திரத்த தூக்கி போடுவா.
மேல படலேன்னா நான் சிரிப்பேன், மேல பட்டதுன்னா அவள் சிரிப்பா.
இப்படியே ஒரே குதூகலமா இருப்போம்.

Labels: ,